நற்றிணை தெளிவுரை
71
அன்பிலே திளைத்தாளாக, அவனூர் பொலிவு பெறுமாறு அவனோடு கூடிக்களித்து இல்லறம் நிகழ்த்தக் யிருப்பாள் என்பதாம்:
சுருதி
மேற்கோள் : * இது முருகற்குக் கூறியது' என நச்சினார்க்கினியரும் (தொல். பொருள். சூ. 114 உரை); து முருகனை முன்னிலையாகக் கூறியது' என இளம் பூரணனாரும் (சூ 112 உரை) காட்டுவர்.
இது
35.
கண் பசந்த காரணம்!
பாடியவர்: அம்மூவனார். அம்மூவனார். திணை : நெய்தல். துறை: மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.
[ (து-வி.) மணம் பெற்றுத் தலைவி தலைவனோடு கூடியதன் பிற்றை நாளிலே, தலைவன், தோழியிடத்தே. 'நீ இதுகாறும் தலைவியை நன்றாக ஆற்றுவித்திருந்தனை' எனப் புகழ்ந்து கூறுகின்றான். அதனைக் கேட்ட தோழி, தலைமகனின் சால்பைப் புகழ்வாளாக இப்படிக் கின்றனள்.]
பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கூறு
கிளைசெத்து மொய்த்த தும்பி, பழம்செத்துப்
பல்கால் அலவன் கொண்டகோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
5
இரைதேர் நாரை எய்தி விடுக்கும்
துறைகெழு மாந்தை அன்ன இவள்நலம்
பண்டும் இற்றே: கண்டிசின் தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
ஞெகிழ்ந்த கவின்நலம் கொல்லோ மகிழ்ந்தோர்
கட்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?-இவள் கண் சந் ததுவே!
10
பொங்கிவந்து மோதுகின்ற அலையானது பொருதிய தனாலே, நேரிதாகிய மணல் அடுத்திருப்பதான கடற்கரையி னிடத்தே உதிர்ந்துகிடந்த புல்லிய காம்பையுடைய கரு நாவலின் பெரிய கனியினைத், தம்மினமென்று கருதி வண் டினம் மொய்க்கும். அவ்வேளையிலே, அதனைப் பழமென்றே