பக்கம்:நற்றிணை 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

நற்றிணை தெளிவுரை


இவளோடும் டு

முற்ற நிரையினின்றும் அகன்று செல்லும், ஒற்றைப் பசுவினது தெளிந்த மணியோசையானது மெல்லென ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலியினயும் உளதாயிருக்கும். அவ்வழியாகக் கூரிய பற்களையுடைய இவளையும் நும்முடன் அழைத்துச் செல்பவராக, நீயிர் பொருளினைத் தடி வருவதற்குச் சென்றீராயின் நலமாயிருக்கும். கலைமானைப் பிரிந்த பிணையினைப்போலக் கலக்கமுற்றுக் குவளையின் நீர் நிரம்பிய கரிய மலரைப்போன்ற இவள் கண்களினின்றும் நீர் வடியுமாறு அன்பில்லாதீராக நீர் பிரிந்து செல்லாதீர். அப்படிப் பிரிந்து போயினீராயின், பாம்பினது வருத்துகின்ற அரிய யானது துண்டுபட்டு வீழும்படியாகச் சினந்து வலமிட்டு எழுந்து, மிக்க முழக்கத்தோடும் நல்ல இடியேறானது திரிகின்றதான கார்ப்பருவத்து மாலைக்காலமானது வந்தடையும் அந்தப் பொழுதிலே, இவள் துயரத்தை மாற்றி இவளைக் காத்திருப்பது என்பது, என் பொறுப்பாகத் தாங்கக் கூடியதன்று. இதனை அறிவீராக!

தலை

'கருத்து: 'இவளைப் பிரிந்து அகன்றீராயின், இவள் அந்தப் பிரிவைத் தாங்காதே இறந்து போவாள்' என்பதாம். சொற்பொருள்: பிணக்கம் - பின்னிக்கிடத்தல். விறல் - வெற்றி; பழைதான காட்டது அழகுத் தோற்றங் மாறி-மாறுபட்டு; அன்பினின்றும் மாறுபட்டு. பரம் - பாரம்; பொறுப்பு. உடலி - சினந்து. கலி - முழக்கம்.

கள்.

விளக்கம் : 'பிணங்கு அரில் வாடிய பழவிறல் நனந்தலை, உணங்கு ஊண் ஆயத்து, ஓர் ஆன் தெள்மணி பைபய இசைக்கும் அத்தம்* என்றது, அவ்வாறே பொலிவழிந்த இவள், இவளது ஊரும் ஆயமும் இவளது மெலிவிற்குச் சோர்ந்திருப்ப, இவள் மட்டும் நின் நினைவாலே கண்ணுறங்காளாய் மெல்ல மெல்ல நடந்து நின் வரவை நோக்கிச் சாம்பியபடியே இருப்பவள்' என்பதாம். அதனால், இவளை நின்னுடனேயே அழைத்துப் போய்விடுக என்பதுமாம். கண் அழுகையால் நீர் நிரம்புதலுற்று விளங்கிய தன்மைக்குக் 'குவளை நீர் சூழ் மாமலர்' என்றனள்.

"கலை ஒழி பிணையின் கலங்கி' என்றது. பிணையது மடப்பம் நிரம்பிய மென்மைத் தன்மையினைத் தலைவியின் தகைமைக்குப் பொருத்திக் கூறியதுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/77&oldid=1627199" இலிருந்து மீள்விக்கப்பட்டது