பக்கம்:நற்றிணை 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

83


41. குறுநடைக் கூட்டம்!


பாடியவர் : இளந்தேவனார். திணை : பாலை. துறை : பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது.

[(து-வி.) தலைவனது பிரிவினை அறிந்த தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அதனைக் கண்ட தோழி. ஆடவர் பொருள்தேடி வருதலால் வருகின்ற இல்லறத்தின் செவ்வியைக் காட்டி ஆற்றியிருக்குமாறு உரைக்கின்றாள்.]

பைங்கண் யானைப் பரூஉத்தாள் உதைத்த வெண்புறக் களரி விடுநீறு ஆடிச் சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப் பாஅர் மலிஉறு கூவலின் தணியும் நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ! எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக் கிளரிழை அரிவை! நெய்துழந்து அட்ட விளர்ஊன் அம்புகை எறிந்த நெற்றிச் சிறுநுண் பல்வியர் பொறித்த

குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே.

сл

10

ஒளி சிதறும் ஆபரணங்களை அணிந்தோளான தலைவியே! இரவுக்காலத்தே வந்தடைந்த நல்ல புகழை யுடையவரான விருந்தினருக்கு, நெய்யைத் துழாவிக் கொழுவிய தசைக் கறியினைச் சமைத்தனை. அவ் வேளை யிலே, அதனிடத்தினின்றும் எழுந்த அழகிய புகையானது நின் நெற்றியிடத்தே படர்ந்தது அதனால், நின் நெற்றி யிடத் நு ண்ணிய பலவாய வியர்வுத் துளிகளும் தோன்றின. அத் தளர்ச்சியினாலே, குறுக நடந்தவளாகச் சென்ற நினது கூட்டத்தை மிகவும் விரும்பினராக இன்புற்றவர் நின் தலைவர். பசிய கண்களையுடைய யானையது பருத்த காலால் உதைக்கப்பட்டுப் பொடி பட்டதான, வெள்ளிய மேலிடத்தைக் கொண்ட பாழ் நிலத்தேயுள்ள புழுதியிலே மூழ்கியவராகச் சுரத்தின் கண்ணே பெற்று வருந்திய வருத்தமெல்லாம், பாறைப் பகுதியே மிக்குள்ளதான சிறு கிணற்றிடத்தே சென் தணித்துக் கொள்பவர் வழிப்போக்கர். அத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/84&oldid=1627206" இலிருந்து மீள்விக்கப்பட்டது