பக்கம்:நற்றிணை 1.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

87


மெய்ம்மலி உவகை ஆகின்று; இவட்கே

அஞ்சல் என்ற இறைகை விட்டெனப்

பைங்கண் யானை வேந்துபுறத்து இறுத்தலின் களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் ஓர்எயின் மன்னன் போல,

அழிவுவந் தன்றால், ஒழிதல் கேட்டே.


10

வெயிலின் மிகுதி விளங்கிய வெப்பத்தையுடைய மலைப் பக்கமானது. வெண்துகிலினை விரித்து மூடியிருந்தாற் போலத் தோற்றும், கோடைநீடிய. அத்தகைய குன்றத்தின் பக்கத்தே. பசியினாலே தளர்ந்துபோன செந்நாயானது, கோடைக்காற்றாது வாடியிருந்த மரையாவைக் கொன்று தின்று. தன் பசி தீர்ந்தது. அங்ஙனம் தின்றபின் எஞ்சிக் கிடந்த மிச்சம், நெடுந்தொலைவிடத்து நாட்டினைக் குறித்தவராக, கடத்தற்கரிய அச் சுரநெறியிலே செல்லும் பயணிகளுக்கு உணவாகப்பயன்படும். அத்தகைய வெம்மை மிக்க வழிலனைக் கடந்து பொருள்தேடச் செல்லுதல் என்பது, நமக்கு மேனிதிளைக்கும் உவகையினை உடைத்தா கின்றது! இவட்கோ, நீவிர் விட்டுப் பிரிதலினாலே, 'அஞ்சேல்' என்று அபயமளித்துக் காத்த இறைவன் கைவிட்டுச் சென்றானாக, அவ்வேளையிற் பசுங்கண்களை யுடைய யானைப் படைகளை யுடையானான பெருவேந்தன் ஒருவன் எதிற்புறத்தே வந்து பாடியிட்டுத் தங்குதலும், தன் அழிவினைப் போக்குவாரைக் காணாதே கலங்கியவனான, உடைந்து கொண்டு போகும் ஒரே மதிலையுடைய சிற்றரசனைப்போல, அழிவும் வாரா நின்றது!

கருத்து: 'இவளைப் பிரிந்தால் இவள் அழிவாள் என்பதாம்.

சொற்பொருள் : உருப்பு - வெப்பம். என்றூழ் - கோடை. கவா அன் - பக்கமலை. ஓய்பசி - ஓய்ந்த பசியுமாம்; பலநாட் பசிக்கு உணவில்லாத நிலை. வல்சி - உணவு.

ஓய்பசி ஓய்ந்த பசியுமாம்; பலநாட்

விளக்கம்: 'ஓரெயில்' தலைவியின் உடல்; அஞ்ச லென்ற இறை' தெளிவித்துக் கூடியிருந்த தலைவன், 'அவன் நீங்கியதும் பகையரசன் கோட்டையை முற்றுகையிட்டு உடைத்தல்', தலைவன் அகன்றதும் பசலைநோய் தலைவிய து மேனியழகைச் சிதைத்தல்; 'அதனாற் களையுநர்க் காணாது கலங்கிய மன்னனின் நிலை' தலைவியது உயிரின் நிலை; இவ்வாறு பொருத்திப் பொருள்கண்டு கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/88&oldid=1627210" இலிருந்து மீள்விக்கப்பட்டது