பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


-கான சாயங்களை உண்டாக்கலாம். என்னிடம் திறமை இருக்கிறது; ஆனால், அதை உங்களுடைய நகரில் பயன்படுத்த வழியில்லையே!

 அதைக் கேட்ட அரசர், "நீ சொல்லுவது உண்மைதான். உனக்காக நான் ஒரு புதிய சாயப்பட்டறை திறக்கத் தயாராய் இருக்கிறேன். அதற்கு வேண்டிய மூலதனமும் தருகிறேன். உனக்கு இனிமேல் கவலையே வேண்டியதில்லை. உனக்கு எவர்களாவது இனி இடையூறு செய்தாலும், தடை உண்டாக்கி னாலும், அவர்களைத் தூக்கிலே தொங்கவிட்டுவிடுவேன்!” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். உடனேயே அவர், கைதேர்ந்த கொற்றர்களை வரவழைத்து, நீங்கள் இந்தச் சாய நிபுணருடன் சென்று, நகரைச் சுற்றிப் பார்த்து, புதிய சாயப் பட்டறை அமைக்க இவர் தேர்ந்தெடுத்துக் காட்டும் இடத்தைக் கவனியுங்கள்! அங்கே எவருடைய கட்டடம் இருந்தாலும், அதில் இருப்பவர்களை உடனே காலி செய்யச் சொல்லி, அதை இடித்துவிட்டு, இவர் சொல்லுகிற முறையில் புதிய கட்டடத்தைக் கட்டி முடியுங்கள்! இவர் சொல்லுவதுதான் உங்களுக்குச் சட்டம்; அதை நீங்கள் மாற்றவோ, எதிர்க்கவோ கூடாது; எச்சரிக்கை!" என்று சொன்னார். மேலும், அவர் சாயக்காரனான அபி கிர்ருக்கு மதிப்புயர்ந்த புதிய உடைகள் அளித்து, அவனுக்கு ஏவல் புரிய இரு வெள்ளை அடிமை களையும், அவன் ஏறிச் செல்வதற்கு உயர்ந்த குதிரை ஒன்றையும் அவனிடம் ஒப்படைத்தார். ஆயிரம் தினார் * நாணயங்களை அவன் கையிலே கொடுத்து, மன்னர்,"கட்டடம் கட்டும்வரை இதை உன் விருப்பம்போல் செலவு செய்ய வைத்துக்கொள்ளவும் !" என்று கூறினார். அவன் வசிப்பதற்காக ஒரு வீடும் ஒதுக்கப்பெற்றது. அவ்வீட்டுக்குத் தேவையான நாற்காலிகள், கட்டில் முதலியவைகளையும் உடனே வாங்கி வைப்பதற்கும் மன்னர் உத்தரவிட்டார்.
  • தங்க நாணயம்