102 நல்லிசைப் புலவர்கள்
யென விரைந்து சென்றது. இங்கனம் தம்மூர் கோக்கி வரும் புலவரேறு, புலவர்களின் அருமை பெருமை அறி யாதும். தமது புலமையின் வீறு உணராதும் வரிசையின் றிச் சிறிது கொடுத்தவனகிய இளவெளிமானுக்குப் புல வரிது; மிகுதிப்பாட்டையும், அவரது தி: மறிந்து கொடுப்போரது தகுதிப்பாட்டையும் நன்கு அறிவுறுத் தக் கருதி, இளவெளிமானது ஊர் முகமாக த் தாம் ஊர்ந்து செல்லும் களிற்றைச் செலுத்தி, அதனே அவ னது காவன்மரத்தில் பிணித்துவிட்டு, இளவெளிம, னுழைச் சென்று, -
இரவலர் புரவலே நீயு மல்லை:
புரவலர் இரவலர்க் கில்லை யு மல்லர் ; இரவல ருண்மையுங் காணினி : இரவலர்க் கீவோருண்மையுங் காணினி ; நின்னுார்க் கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் ருேன்றல்! செல்வல் யானே.” என்ற செய்யுளால், இரப்போர்க்குக் கொடுத்துப் பாது காப்பவன் நீ ஒருவனே பல்லன் பாதுகாப்போர் யாசிப் பவர்களுக்கு இல்லாமற் போகவுமில்லே; இனிப் புலவர்க் குள்ள பெருந்தன்மையை என்னளவிலே காண்பாயாக அவர் தகுதியறிந்து கொடுப்போரிருப்பதையும் பார்ப்பா யாக. உன் ஊரில் உள்ள காவலையுடைய மரம் வருந்தும் படியான் கொண்டு வந்து கட்டிய உயர்ந்த கல்லிலக்கண மமைந்த யானை, எனது பரிசில்; விரைவான கதி பொருங் திய குதிரைகளையுடைய தலைவனே, இனி யான் செல் வேன்,' என்னும் தமது கருத்தைப் பெருமிதத்துடன் கூறிவிட்டுத் தமது பகட்டின் மீதிவர்ந்து சென்றார்,
காவல் மரமென்பது, பண்டைக் காலத்துத் தமிழ்