பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6 நல்லிசைப் புலவர்கள் யையும் அவனது கொடையின் தகுதியையும் புகழ்ந்து மகிழ்ந்தார்.

பின்பொரு நாள் புலவர், குறுகிய இறப்புக்களே யுடைய சிறிய வீடுகளில் வாழும் குறவர்கள், மூங்கிற் குழாய்களில் வார்த்து வைத்து முதிர்ந்த மதுவை உண்டு, வேங்கை மரத்தையுடைய முற்றங்களில் குரவைக் கூத் தாடும் பெரிய மலேயையுடையோனுகிய ஆய் அண்டி ான் இரப்போர்க்குக் கொடுக்கும் யாக்னத் தொகைக்கு, ஆகாயம் மேகம் மறைத்தலின்றிப் பல கட்சத்திரங்களே யும் பூக்குமாயினும் சமமாகாது; அது கரிய இடம் சிறிது மில்லாது எல்லா இடமும் வெண்மையாய் நட்சத்திரங் களேப் பூத்து வெண்மை செய்யுமாயின், அதற்கு ஈடா கும்,” எனவும் " ஆயே, உன்னேயும் உன் மலேயையும் பாடி வரும் பரிசிலர்க்கு கீ இன்முகத்தோடு விரும்பிக் கொடுக்கும் சிறந்த யானைகளை எண்ணின், கொங் கரை மேற்கடற்கண்ணே ஒட்டிய காளில் அவர் புறங் கொடுத்து ஓடும்போது போட்டுவிட்டுப் போன வேலி னும் பலவாயிருக்கின்றனவே! ஆகையால், நீ இங்ஙனம் வழங்குதற்கு உன் காட்டில் ஒரு பெண் யானே ஒரு கர்ப் பத்தில் பத்துக் கன்றுகளேப் பெறுமோதான்் ' எனவும் கறி, அவனது வரம்பற்ற யானேக் கொடையையும், வென்றி மேம்பாட்டையும் வியந்தார்.

மற்றுமொருகால் மோசியார், ஆடல் பாடல்களிற் சிறந்த ஒரு விறலியைக் கண்டு, ' மெல்லியல் விறலி, நீ ஆயின் நல்ல புகழைச் செவியாற்கேட்டலன்றி, அவன் வடிவை கேரிற்கண்டறியாய் காணுதற்கு விரும்புவை யாயின், உனது நறுமணமிக்க கொண்டைமேல் காற்ற டிக்க இனிதாய்ப் பீலி மயில் போல நடந்து, மாரியன்ன வண்மையையுடைய ஆயைக் காணற்குச் செல்வாயாக,'