பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம் óf

மாணிக்கவாசகர் இம்மண்ணுலகில் உயிர்கள் எடுக்கும் பல்வேறு பிறப்புகளை கழிவிரக்கத்தோடு, உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் பக்குவ நிலையோடு குறிப்பிடுகின்றார்: -

‘’ புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 1.

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்; எம்பெருமான் ’’

-சிவபுராணம் : 26-31. என்று பிறவிப் பிணியின் புன்மையினைக் கூறி, அப்பிணி போக்கும் மாமருந்து சிவனின் திருவடிகளே என்பதைத் தெரிவிக்கும் வகையில்,

மெய்யே உன்பொன் அடிகள்

கண்டுஇன்று வீடு உற்றேன். ‘ எனப் புகல்கின்றார். புறத்தார்க்குச் சேயோனாய், நேயத்தே நின்ற நிமலனாய், மாயப்பிறப்பு அறுக்கும் மன்னவனாய், ஆராத இன்பம் அருளும் மலை'யாய், மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்சுட'ராய், ‘அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவாய் விளங்கும் சிவபெருமானே இவ்வுலகின் உண்மைத்தெய்வம் என்கின்றார். ‘இப்பூவுலகத்தில் உள்ளவர்கள் உண்மைத் தெய்வத்தை உள்ளபடியே உணர்ந்ததாகத் தெரிய வில்லை. ‘அந்தத் தேவர்தான் சிறந்த தேவர்; அவர் தான் எல்லாம் வல்ல தேவர் என்று இவ்வாறு பொய்த் தெய்வங்களைப் பற்றிப் பேசிப் புலம்புகின்றனர். இவ்வுல கிலே நான் உண்மைத் தெய்வத்தை உணர்ந்தேன். வேறு ஒரு பற்றும் எனக்கில்லை. என் பற்று முழுவதும் அழிந்து போக வேண்டும். அந்த உண்மையான