பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|

பாரதியார்

14. ஒருமை உணர்வு

பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று நாட்டு மக்களால் நயமுறப் பாராட்டப்பெறும் பாரதியார், விடுதலை வேட்கை வெறிகொண்ட ஒர் ஒப்பற்ற கவிஞ ராவர். இந்திய நாட்டின் இணையிலாத விடுதலைப் போராட்டத்தில் வீறுடன் பங்குகொண்ட நாட்டுப்பற்று நிறைந்த நல்ல கவிஞர். அவருக்குத் தாம் பிறந்த தாய் நாடாம் இந்தியத் திருநாட்டை எண்ணிப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு பெருமித உணர்ச்சி தோன்று வதனைக் காணலாம். -

‘எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி யிருந்தது மிங்நாடே-அதன் முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே-அவர் சிங்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து

சிறந்தது மிங்காடே-இதை வந்தனை கூறி மனதி லிருத்தியென் வாயுற வாழ்த்தேனோ’ *

என்று நாட்டு வணக்கம் பாடுகின்றார் கவிஞர். நாட்டின் உயர்விற்கு நற்காரணமாய்த் துலங்கும் நங்கை யர் புகழையும் நெஞ்சினிக்கப் பாடுகின்றார் பாரதியார்.