பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

118 -- நல்லோர் நல்லுரை

“......... எங்கள்

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்தது மிங்காடே-அவர் கன்னிய ராகி நிலவினிலாடிக்

களித்தது மிங்காடே’ என்கிறார்.

‘மன்னுமிமய மலையெங்கள் மலையே’ என்றும், “மாநில மீதது போற்பிறிதிலையே’ என்றும், இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே என்றும், இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே என்றும் பரவசத்துடன் பாடும் பாரதி,

‘'பூரண ஞானம் பொலிந்த கன்னாடு

புத்தர் பிரா னருள் பொங்கிய நாடு - பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவ மிங்கதை யெமக்கிலை யீடே.”

என்றும் பாடிப் பாடிப் பெருமிதம் கொள்கிறார்.

மேலும் சத்ரபதி சிவாஜி, தன் சைனியத்திற்குக் கூறியதாக அவர் எழுதும் பாடலில்,

‘பாரத பூமி பழம்பெரும் பூமி,

நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர் பாரத நாடு பார்க்கெலாம் திலகம் ரேதன் புதல்வர்; இந் நினைவகற்றாதீர்’ என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றார்.

“புன்னாக வராளி ராகத்தில் அமைந்த பாரத தேசம்’ என்ற பாடலில் பாரதியின் நாட்டு ஒருமைப் பாட்டுணர்ச்சி தெளிவுறத் திகழ்வதனைக் காணலாம்.

சிந்து நதியில் நல்ல நிலாக்காலத்தில் ஒரு தோணி ஒடுகிறது. அத் தோணியில் சேரநாட்டுப் பெண்ணோடு