அண்ணலின் அருட்சிந்தனை I29
மாகும். சமூகத்தில் உள்ள ஏழைகளின் ஒத்து ழைப்பு இல்லாமல் பணக்காரர்களால் செல்வந்
திரட்ட முடியாது.”
என்று அங்கேயும் அகிம்சை வழியையே வழிகாட்டு கிறார்.
‘இந்த வையத்து நாட்டில் வாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு, பாழ் பட்டு நின்ற தாமோர் பாரத தேயந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி’ என்று பாட்டுக்கொரு புலவன் பாரதியார், நாட்டுக்கொரு தந்தை அண்ணல் காந்தியடிகளை அன்றே நலமுறப் புகழ்ந்து பாடியுள்ளார். அண்ணலின் வாழ்வு நாட்டுக்கெனத் தம் உடல், பொருள், உயிர் அனைத்தையும் அர்ப்பணித்த-அறவழிப்பட்ட தியாக வாழ்வாகும்.
‘வாழ்கரீ எம்மான் இந்த
வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு கின்ற தாமோர்
பாரத தேசங் தன்னை வாழ்விக்க வந்த காந்தி
மஹாத்மா! நீவாழ்க! வாழ்க!”
-மஹாத்மா காந்தி பஞ்சகம்
3
‘மக்களுக்காக வாழ்பவர் எல்லாம் நிலைபெறும் தலைவர்களே மதிப்பினுக்காக அலைபவர் எல்லாம்