பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையும் உயிர் 89

‘ மெய்ம்மையாம் உழவைச் செய்து

விருப்பெனும் வித்தை வித்தி

பொய்ம்மையாம் களையை வாங்கிப்

பொறையெனும் நீரைப் பாய்ச்சித்

தம்மையும் நோக்கிக் கண்டு

தகவெனும் வேலி யிட்டுச்

செம்மையுள் நிற்ப ராகில்

சிவகதி விளையும் அன்றே.’

இவ்வாறு திருநாவுக்கரசர் பெருமான் உலக உயிர்கள்

உய்யுநெறியினை, ஒழுகும் நல்லாற்றினைத் திறம்படக் கூறியுள்ளார்.