பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நல்லோர் நல்லுரை

என்றும், அல்லற் பிறவி யறுக்கும் சொல்லற்கரியான்’ என்றும் அகங்குழைந்து நெக்குருகித் துதிக்கின்றார்.

மாணிக்கவாசகர் அன்பு வேறு ஆண்டவன் வேறு என்று எண்ணியவர் அல்லர். இறைவன் அருளே இடை யறாத இன்பத்தைத் தருவது எனக் கருதியவர். ஆதலால் இறைவனைத் தலைவனாகவும், தன்னைத் தலைவியா கவும் மணிவாசகப் பெருந்தகையார் எண்ணிக் கொண்டு பல பாடல்களைப் பாடியுள்ளார். நானுாறு கட்டளைக் கலித் துறையான் இயன்ற திருக்கோவையார் இம்முறை யில் அமைந்ததாகும். மேலும், நாயகன் நாயகி பாவத்தில் திரு அம்மானைப் பாடல்கள் துலக்கமுறக் காணலாம். அப்பாட்டில் மாணிக்கவாசகர் தம்மைத் தலைவியாக எண்ணி இறைவனை எண்ணி உளம் உருகிப் பாடியுள் 6trysf:

“அழகிய கொன்றை மாலையைத் தலையில் அணி வேன். அணிந்து, சிவபெருமானது எழுச்சிமிக்க தோள் களைச் சேர்வேன்; சேர்ந்து, அவனைக் கூடி, அதனாற் பிறந்த களிப்பால் அறிவு மயங்கிப் புலவியெய்துவேன். பின்னர், புலவி நீங்கி, அவனது சிவந்த இதழைப் பெற உளமுருகி நிற்பேன். நெஞ்சம் நிறையழிந்து நெக்குருக அவனைத் தேடுவேன். தேடி, அவன் திருவடியை எஞ்ஞான்றும் நினைந்திருப்பேன். அவன் திருவருளைப் பெறாது மெலிவேன். அதனைப் பெற்று மீண்டும் மகிழ்வு கொள்வேன். எனவே நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற கூத்தனின் சிவந்த திருவடிகளை நாம் பாடுவோமாக.”

‘சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன் திரள்தோள்

கூடுவேன்; கூடி முயங்கி மயங்கிகின்று ஊடுவேன்; செவ்வாய்க் குருகுவேன்; உள்ளுருகித் தேடுவேன்; தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்: