இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விரும்பிற்று. அது அவ்விதம் செல்லும் போது கோபாலன் மனையின் கீழே ஒரு தேள் ஒளிந்திருந்தது. அதை அவ்வெறும்பு எப்படியோ பார்த்து விட்டது - ஆ ! அந்தத் தேள் கோபாலனைக் கொடுக்கினால் கொட்டி விடும் அல்லவா ? ஆதலால் அந்த நல்ல எறும்பு மிகவும் வருந்தியது. பிறகு ஏதோ சிறிது யோசித்தது. முடிவில் அது கோதண்டனுக்கு அருகே சென்று அவன் பார்க்கும்படி அவன் இலையின் மேலே ஏறியது. அப்போது கோதண்டன் மிக்க கோபத்தோடு அதைப் பிடித்துக் கொன்று விட எண்ணினான். ஆனால் அது, அவன் கையில் அகப்படாமல் வளைந்து வளைந்து ஒடிற்று.
அப்போது கோவிந்தனும், “அடே, கோதண்டா, அதை விடாதே ; கொன்று விடு,” என்றான். ஆதலால், கோதண்டன், தான் சாப்பிடுவதை விட்டு எழுந்தான். அந்த எறும்போ அவனுக்கு ஆட்டங் காட்டிக் கொண்டே தேள் இருக்கும் இடத்தில்
22