பக்கம்:நல்ல கதைகள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

12


வழக்கத்திற்கு விரோதமாக கண்ணன் சீக்கிரமே வீட்டை வந்தடைந்தான்.

வீடு என்றதும், பெரிய மாடி வீடு என்று நினைத்து விடாதீர்கள். சென்னை நகரிலே, இருநூறு ரூபாய்க்கு எவ்வளவு பெரிய வீடு வாடகைக்குக் கிடைக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

ஒரு பெரிய வீட்டில், பல குடும்பங்கள் குடியிருக்கும் ஒரு பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

கண்ணன் மிகக் கவனமாக, பால் குடிக்கப் போகும் பூனை போல, மிகவும் நிதானமாக, காலடி வைத்து வீட்டின் உள்ளே நுழைந்தான்.

கண்ணீர் வழிய, கால்களை நீட்டி சுவற்றில் சாய்ந்தவாறு அவனது தாய் அமர்ந்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/14&oldid=1081095" இலிருந்து மீள்விக்கப்பட்டது