இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
36
இப்படித் தூங்குகிறானே, 'நேரம் ஆகிவிட்டதே' என்று மேஜை மேல் இருந்த கடிகாரத்திற்கு 'பக் பக்' என்றது. பாவம், அது 'டக்டக்' என்ற சத்தத்துடன் எழுப்பத் துடித்தது.
அப்பாவுக்கே பயப்படாதவன். அலாரத்திற்குப் பயப்படுவானா? எப்படியோ போகட்டும் என்று பெரியமுள் வேகமாகப் போகத் தொடங்கியது. போர்வைக்குள்ளிருந்து குறட்டை ஒலி, ராகம் போல வந்து கொண்டிருந்தது.
தரையே அதிர்வது போல ஒரு பெண் அந்த அறைக்குள் வந்தாள். காலையில் அந்த அறைக்குள் நுழைபவள் 'பர்வதம்' என்ற வேலைக்காரியாகத்தான் இருப்பாள்.
'பர்வதம்' என்றால் மலையல்லவா! அவள் உடலும் அப்படித்