இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
கண்ணனுடைய கண்கள் மூடியவாறு இருந்தது, அவனது மனம், ஆனந்த நினைவுகளில் உல்லாச ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது.
அவன் அரைத் தூக்கத்தில் இருப்பது போல் அமர்ந்திருந்தான். அவனது நெற்றியில் சுருக்கம் விழுந்து விரிந்தது, எதையோ அவன் ஆழ்ந்து யோசிப்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
“இன்று மாலை வரவேண்டியதுதான். வீட்டிற்குப் போக வேண்டும். போனதும், அந்த மூலைக்குள்ளே கையைவிட்டு ‘அதை’ எடுத்துக் கொண்டு அப்படியே புறப்பட்டு...”
அணைகடந்து ஓடுகின்ற புது வெள்ளம் போல, அவனது ஆசை