இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
78
அந்தச் சத்தம் கேட்டு அரண்டு போன அனைவரும். மூலைக்கொருவராக தங்கள் வீடுகளை நோக்கி ஓடத் தொடங்கினர்.
சிங்காரம் எங்கே போவான்? அவன் தான் கொலை செய்தவன் ஆயிற்றே!
ஊருக்குள் சென்றால், அத்தனை பேரும் தன்னை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்ற பயம் சிங்காரத்தை மிரட்டியது.
‘எங்கேயாவது ஓடிவிடு’ என்று பயந்த மனம் சிங்காரத்தை பாதுகாப்புடன் விரட்டியது.
திரும்பிப் பார்க்காமலே ஒடத் தொடங்கினான்.
புயல் காற்றிலே சிக்கிய படகு போல, நூலறுந்து திரியும் பட்டம்