பக்கம்:நல்ல கதைகள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

80


போல, அவன் போய்க் கொண்டேயிருந்தான்.

பட்டணம் வந்து சேர்ந்து பல நாட்களாகி விட்டன. தினமும் பசியோடு போராடினான். படுத்துக் கொள்ள இடமில்லாமல் திண்டாடினான். கிழிந்த உடைகளோடு, கேவலமான நிலையில் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தான்.

'கூலி வேலை செய்தால்தான் கால் வயிறாவது நிறையும் ' என்று ஒரு முடிவுடன் வேலை செய்ய முனைந்தான்.

ஒருநாள் மாலை, சிங்காரம் ஒருபேருந்து நிலையத்தின் முன்நின்று கொண்டிருந்தான். காலையிலிருந்து பட்டினி, கூலி ஏதாவது கிடைத்தால்தான் சாப்பிட முடியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/83&oldid=1081465" இலிருந்து மீள்விக்கப்பட்டது