இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
96
இரு நண்பர்களும் மீண்டும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டனர். அன்பின் மிகுதியால்.
ஆத்திரம் வரும் பொழுது அறிவு விலகிப் போய் விடுகிறது. அறிவு மீண்டும் வரும் பொழுது ஆத்திரம் வெட்கப்பட்டு ஓடியே விடுகிறது.
ஆகவே 'ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு' என்பதை மறந்து, 'அன்பு வழியே இன்ப வழி' என்று நாம் வாழ்வோம் என்றான் சிங்காரம்.
சிங்காரத்தின் பெற்றோர்கள் தலை நிமிர்ந்து, பெருமை பொங்க அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தனர்.