பக்கம்:நல்ல குழந்தை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் பிராமணர் ஒரு குறையும் இல்லாமல் சுகமாக வாழ்ந்து வந்தார்; ஆனால், அவருக்குக் குழந்தை மட்டும் பிறக்கவே இல்லை. ஆதலால், அவர் கோயிலுக்குப் போகும் போதெல்லாம், “சுவாமி, எனக்கு ஒரு நல்ல ஆண் குழந்தை வேண்டும்,” என்று கடவுளை வேண்டி வருவார்.

சில நாள் கழித்து அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மிகவும் அழகாக இருந்தது. தாயாரும், தகப்பனாரும் அந்தக் குழந்தையைக் கண்டு மிகவும் சந்தோஷப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/6&oldid=1354574" இலிருந்து மீள்விக்கப்பட்டது