இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
104 நல்ல சேனபதி
"இனிமேல் நீங்கள் வருவதை ஆள்மூலம் தெரிவி யுங்கள். நாம் வண்டி அனுப்புவோம். வழி நடந்து துன்புற வேண்டாம்' என்று கூறிப் புன்னகை பூத்தார் பாண்டியர். புதிய அலங்காரங்களோடு உவகையில் மிதந்த தம் மனைவி தம்மைத் தொடர்ந்து வரப் புலவர் புது மாப்பிள்ளையைப் போலப் புறப்பட்டார்.