பக்கம்:நல்ல சேனாபதி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நல்ல சேனுபதி

நாகரிகத்தையோ நம் நிலையையோ நாணத்தையோ பார்க்கக்கூடாது. எல்லோருமே உன்னைப்போலப் புரளப் புரளத்தான் சில உடுத்துகிருர்களோ?"

"எல்லோருமே சமீன்தார் மனைவிகள் ஆவார் களா?’’

"அப்படியால்ை நீ இங்கே நடக்கக்கூடாது.” சமீன்தாரிணி சற்றே உறுத்து அந்த இளம் பெண்ணைப் பார்த்தாள். 'என்ன பைத்தியக்காரப் பேச்சுப் பேசுகிருய்? கோயிலுக்கே வரக்கூடாது என்று கூடச் சொல்வாய் போலிருக்கிறதே ! ஆடை அழுக் கானுல் துவைத்துக் கொள்ளலாம்; அழுக்கைப் போக்கி விடலாம். இதை ஒரு பெரிய காரியமாக எண்ணிக் கொண்டு இறைவன் கோயிலை வலம் செய்யாமல் இருப்பதா?’ என்ருள். -

“அதெல்லாம் சரிதான்; நாம் நம் ஊருக்குப் போகு மட்டும் இந்த அழுக்காடையைக் கட்டிக்கொண்டுதானே இருக்கவேண்டும்? மாற்றுடை ஒன்றும் கொண்டு வரவில்லையே சற்றே நம்முடைய உயர்ந்த நிலையை நினைந்து, சீலையில் அழுக்குப்படாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கலாமே!"

'இந்த எண்ணம் எனக்குத் தோன்றவே இல்லை. எங்கேயாவது இப்படி நடந்திருந்தால்தானே பழக்கம் இருக்கும் ? அப்படி நடந்தாலும் கையால் சீலையைக் கால் தெரியும்படி பற்றிக்கொண்டு நடக்க மனம் துணியாது.” .

'சரி சரி; நீ சொன்னதையே சொல்லிக் கொண்டி ருக்கிருய், ஆடையைத் தழையத் தழைய உடுத்துக் கொள்ளவும் வேண்டும், அழுக்கும் படக்கூடாதென்ருல் ஒரு காரியம் செய்தால் நல்லது. இந்த ஒரு சீலைக்காக அப்படி யார் செய்வார்கள்? - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/117&oldid=584080" இலிருந்து மீள்விக்கப்பட்டது