பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

13

முல்லை : விளங்கவில்லை.

சாலி : இளவரசிக்குத் திருமணமா?

கிள்ளை : உனக்கும் நினைவு இல்லை. முல்லை பிறந்த நாள் அடுத்த வெள்ளிக்கு.

முல்லை : ஆ!

சாலி : உனக்கு மட்டும் எப்படி நினைவு வந்தது?

கிள்ளை : முல்லை எப்போதும் என் நினைவில் நிலையாக இருக்கிறாள்.

முல்லை : கிள்ளை நீ என் மீது வைத்துள்ள அன்பு பயனற்றது.

கிள்ளை : அது உனக்குத் தெரியாதோ, அன்பு பயனை எதிர்பார்த்ததல்ல. பயனை எதிர்பார்த்தது எது தெரியுமா? வாணிகம்.

முல்லை : வாயாடி! போவோம்.

சாலி : கிள்ளையோடு பேசுவதில் தெவிட்டு ஏற்படுவதில்லை.

[அனைவரும் எழுந்திருக்கிறார்கள்]