பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

23

அடித்தது. என்ன என்றேன்; ஒன்றுமில்லை என்று கூறி சாப்பிட்டபின் அரண்மனைக்குப் போகலாமா என்று, வேறு பேச்சைத் துவக்கினாள். அதை அவள் இடையில் செருகினாள். அது, துணியில் முடிந்த தங்கக்காசு அளவு காட்சி அளித்தது.

அரசர் : குழந்தாய்! நீ வருந்தலாகாது. நான் கிள்ளையை அறமன்றுக்கு அழைக்க வேண்டும். அவள் என் படைத்தலைவர் மகள், உனது அன்புள்ள தோழி ஆயினும் அறத்தின் முன் அனைவரும் நிகர்.

முல்லை : அவள் நல்லவள் அப்பா.

அரசர் : அறமன்றம் அவளை நல்லவள் என்று உறுதி செய்யட்டுமே!

சாலி : அரசே, அவள் தீயவள். அவள் தீயவளானால், அறமன்றம் தீர்ப்புக் கூறட்டும்.

அரசர் : மன்றம் நோக்கிச் செல்லுவேன். இதில், சேர்க்கையுடையவர் அனைவரையும் மன்று நோக்கி வரும்படி அழைப்பு அனுப்புகிறேன்.

சாலி : வணக்கம்.

[போகிறாள்]

கன்னல் : கிள்ளை நல்லவள் என்று நான் எண்ணினேன்.

முல்லை : இப்போதும் அவள் நல்லவள் தான் அம்மா

[அரசர் போகிறார். முல்லை தலை குனிந்தபடி வருத்தத்தோடு தன் அறை நோக்கிச் செல்லுகிறாள்]