பாரதிதாசன்
23
அடித்தது. என்ன என்றேன்; ஒன்றுமில்லை என்று கூறி சாப்பிட்டபின் அரண்மனைக்குப் போகலாமா என்று, வேறு பேச்சைத் துவக்கினாள். அதை அவள் இடையில் செருகினாள். அது, துணியில் முடிந்த தங்கக்காசு அளவு காட்சி அளித்தது.
அரசர் : குழந்தாய்! நீ வருந்தலாகாது. நான் கிள்ளையை அறமன்றுக்கு அழைக்க வேண்டும். அவள் என் படைத்தலைவர் மகள், உனது அன்புள்ள தோழி ஆயினும் அறத்தின் முன் அனைவரும் நிகர்.
முல்லை : அவள் நல்லவள் அப்பா.
அரசர் : அறமன்றம் அவளை நல்லவள் என்று உறுதி செய்யட்டுமே!
சாலி : அரசே, அவள் தீயவள். அவள் தீயவளானால், அறமன்றம் தீர்ப்புக் கூறட்டும்.
அரசர் : மன்றம் நோக்கிச் செல்லுவேன். இதில், சேர்க்கையுடையவர் அனைவரையும் மன்று நோக்கி வரும்படி அழைப்பு அனுப்புகிறேன்.
சாலி : வணக்கம்.
கன்னல் : கிள்ளை நல்லவள் என்று நான் எண்ணினேன்.
முல்லை : இப்போதும் அவள் நல்லவள் தான் அம்மா