பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56) பரதன் உடன்பிறந் தோனே ஒருமொழி கூறிடு! அன்பின் தெய்வம் ராம னெங்கே? உறைந்தது எவ்விடம்? உண்டது எவ்விடம்? துயின்றது எவ்விடம் திகழ்ந்தது எவ்விடம்? காலடித் தாமரை மலர்ந்தது எவ்விடம்? காலத்தின் நாயகன் வாழ்ந்தது எவ்விடம்? நலமா? நலந்தரும் அண்ணியும் சுகமா? வளமா? வாழ்வில் விளைந்தது சுகமா? உடன்பிறந்தோனே? ஒருமொழி கூறிடு! (of னக்கிந்த அரசுரிமை ஏனே? ஏனே? தினந்தினம் பழியொடு வாழ்ந்திடத் தானோ?