பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 திருமுக் கூடலில் சேர்ந்தனள் ஓர் நதி பெருமை நிறைந்தவள் பெயர் கபிலா நதி மைசூர் மாநிலத்தில் அவளோ ஜீவநதி பேசும் பெருமைக்கெலாம் அவளோ தேவநிதி காவிரி கபிலையுடன் கலந்தே சென்றனள் ஆவலில் அங்குத்தான் சுவர்ணையும் நின்றனள் படையுடன் படையொன்று சேருதல் போலவே தடைகள் இன்றியே சேர்ந்தனர் இருவரும்! தடையும் வந்தது தடத்தின் மீதிலே.... அடைந்தது பிரிவுதான். அறுந்ததும் உறவுதான், சிவசமுத் திரம் எனும் உயர்ந்தஒர் மேடுதான் சிவனின் தலை போல நிமிர்ந்த ஓர் நோக்குதான்.