இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாவாடை ரவிக்கை அணிந்து
பூனைக் குட்டி வந்ததாம்
பச்சைக் கோட்டுக் குல்லாப்போட்டு
நாய்க் குட்டியும் வந்ததாம்
காவாமல் வீட்டை விட்டுக்
கடைகள் உள்ள வீதியில்
காசுப் பையைக் கையில் மாட்டிக்
குட்டி ரண்டும் நடந்தன
பட்டணத்தைச் சுற்றிச் சுற்றிக்
கடைகளெல்லாம் பார்க்கணும்
பலவிதமாய்த் தீவாளிக்குத்
துணியும் மணியும் வாங்கணும்
பட்டாசும் பறக்கும் வானம்
தம்பிக் கண்ணுக்கு வாங்கணும்
பட்டுச் சொக்காய் ஜரிகைவேட்டி
மாப்பி ள்ளைக்கு வாங்கணும்.
28