நல்ல நாடகங்கள் - 55 புலவர்: இளவ: - சோழன்: இளவ: சோழன்: இளவ: (சேவகன் தட்டில் பரிசுப் பொருள்களை ஏந்தி வருகிறான். அந்தத் தட்டை வாங்கிப் புலவரிடம் தந்து) கன்னித் தமிழ் பாடும் கவிஞரே! கவிதைச் சுவை நாடும் காவலரே! எளியேனின் காணிக்கை. அருள்கூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். (வாங்கியவண்ணம்) வாழிய மன்னா! வற்றாத கடல் போல, வந்திறங்கும் வான் மழைபோல, தமிழ்த் தாயின் தவப் புதல்வராக, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...வருகிறேன் மன்னவா... வாழ்க தமிழ் வளர்க தங்கள் புகழ்! (வணக்கத்துடன் புலவர்செல்வதைச் செம்மாந்த நிலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார். மறுபுறம் இளவரசன் வேகமாக வந்து நிற்கிறான். சோழன் தன் மகனை வரவேற்கும் - பாவனையில் பார்க்கிறார்) தமிழ் என்றும் வாழும். ஆனால் தங்கள் புகழ் என்றும் வாழாது தந்தையே! வாழ்த்துரையா மகனே? இல்லை. விளக்கவுரை! யாருக்கப்பா விளக்கம்? விவரம் புரியாதவருக்கு. -" புரிந்தும் புரியாதவர்
பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை