இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காற்று
கண்ணுக்குத் தெரியா காற்றே நீ
கற்பனைப் பேச்சுக்கு ஊற்றே நீ !
வாழ்கிற உயிருக்கு மூச்சாவாய்
வாயில் புகுந்தே பேச்சாவாய்
சூழ்கிற உலகில் மறைந்திருப்பாய்
தெய்வம் போலவே நிறைந்திருப்பாய் !
கொடியின் அசைவால்உனை அறிவோம்
கும்பலில் இருந்தால் உனைமறவோம்
பிடியில் அடங்காப் பூங்காற்றே
பேசாமல் உழைப்பது உன்கூற்றே !
சோலையில் தென்றல் பெயராவாய்
சீறியே வந்தால் புயலாவாய்
வேலையில் நீயும் எசமானே
வணங்கியே நானும் மகிழ்வேனே !
20