இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இப்படி வாழ்வோம்
ஆற்றைப் போல கரைகளுக் குள்ளே
அடங்கி நடப்பதுஒழுங்கு!
ஊற்றைப் போல தண்ணிர் தந்து
உதவி செய்வது பண்பு!
காலையில் சூரியன் உதிப்பது போல
காாியம் செய்வது கடமை!
சோலையில் பூக்கள் சிரிப்பது போல
சுகமாய் வாழ்வது திறமை!
காகத்தைப் போல கூடியே வாழ்ந்து
கலந்தே உண்பது அன்பு!
மேகத்தைப்போல மழையைப்பொழிந்து
வாழ்வில் உதவுதல் தியாகம்!
ஒருவருக் கொருவர் உதவியே வாழ்வோம்
இதுவே நமது இலட்சியம்!
ஒருமுறை செய்தே பார்த்தால் புரியும்
உள்ளத்தில் குதிக்கும் ஆனந்தம்!
33