இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
- நல்லாற்றின் நின்ற துணை.
- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
- பண்பும் பயனும் அது.
- அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
- போஒய்ப் பெறுவ தெவன்.
- இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
- முயல்லாருள் எல்லாம் தலை.
- மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான்
- வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
- தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
- சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
- மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
- நன்கலம் நன்மக்கள் பேறு.
- பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
- மக்கள் பேறல்ல பிற.
- தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
- முந்தி யிருப்பச் செயல்.
- ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
- சான்றோன் எனக்கேட்ட தாய்.
22