பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நல்வழி 21


ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக் கேலென்றால் ஏலாய்-ஒரு நாளும் என்னோ யறியாய் இடும்பைகூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. (41)

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு.

                         (42)

ஆவாரை யாரே அழிப்பார் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல். (43)

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை-சீச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியா துயிர் விடுகை சால உறும்.

                      (44)

சிவாய நமஎன்று சிந்தித் திருப்போர்க்

கபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்

இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். (45)