இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நல்வழி 21
ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக் கேலென்றால் ஏலாய்-ஒரு நாளும்
என்னோ யறியாய் இடும்பைகூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. (41)
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு.
(42)
ஆவாரை யாரே அழிப்பார் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல். (43)
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை-சீச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியா துயிர் விடுகை சால உறும்.
(44)
சிவாய நமஎன்று சிந்தித் திருப்போர்க்
கபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். (45)