இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூதுரை 7
உற்ற விடத்தில் உயிர்வழங்குந்
தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ-கற்றுான் பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கிற் தளர்ந்து வளையுமோ தான். (6)
நீரளவே யாகுமாம் நீராம்பல்
தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத் தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுமாங் குணம்(7)
நல்லாரைக் காண்பதுவும் நன்றே
நலமிக்க நல்லாற்சொற் கேட்பதுவும் நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றோ அவரே டிணங்கி யிருப்பதுவும் நன்று.(8)
தியாரைக் காண்பதுவும் தீதே
திருவிற்ற தியார்சொற் கேட்பதுவும் திதே- தியார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ டிணங்கி யிருப்பதுவும் தீது.(9)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால்
வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல்
அவர்பொருட் டெல்லார்க்கும் செய்யும் மழை. (10)