பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்துஸ்தானி விழா

மாம்பலம் பிரக்தியாதி அடைந்திருப்பதற்கு ஏற்கெனவே மூன்றுவித காரணங்கள் உண்டு.

முதலாவது, ராஜாஜியின் வாசஸ்தலம் அங்கே அமைந்திருப்பது.

இரண்டாவது, ராமகிருஷ்ண வித்யாலயம் நடைபெறுவது.

மூன்றாவது, அடியேனுடைய குடியிருப்பு!

இப்போது நாலாவது காரணமாக மகாத்மாஜியின் விஜயத்தினால் மாம்பலத்தின் மகிமை பன்மடங்கு பெருகிப் பாரெங்கும் பரவிவிட்டது. காந்திஜி வந்தது முதல் தியாகராய நகரின் தோற்றமே அடியோடு மாறிப்