பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

57


காந்திஜி எல்லோருக்கும் பட்டம் வழங்கி முடிந்ததும் ராஜகுமாரி அமிர்தகெளரி தமது பட்டமளிப்பு விழாப் பிரசங்கத்தைப் படித்து முடித்தார்.

பட்டமளிப்பு விழாவைத் தவிர, மகாத்மாஜி மாதர்கள் மாநாட்டில் பேசினார்; ஊழியர்கள் மகாநாட்டில் பேசினார்; எழுத்தாளர்கள் மகாநாட்டில் பேசினார்; மாணவர்கள் மகாநாட்டில் பேசினார்; தினசரி மாலை வேளைப் பிரார்த்தனைகளின்போது பேசினார். அவர் சென்னையில் தங்கியிருந்தபோது தமக்கிருந்த இடைவிடாத அலுவல்களுக்கிடையே இன்னும் பல காரியங்களையும் கவனித்திருக்கிறார். பார்லிமெண்டு தூது கோஷ்டிக்குப் பேட்டியளித்திருக்கிறார். சென்னை கவர்னரைக் கண்டு எண்பது நிமிஷ நேரம் பேசியிருக்கிறார். மகாகனம் சீனிவாச சாஸ்திரி அவர்களை ஜெனரல் ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். பல அரசியல் பிரமுகர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் பேட்டியளித்திருக்கிறார். மகாத்மாஜியின் இத்தனை அலுவல்களுக்கும் ஒருவிதமான குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொண்ட