பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

73


நானும் பத்திரிகை நிருபர்கள் சிலரும் படிக்கட்டுகளில் ஏறி மலை உச்சியை அடைந்தோம்.

எஸ்.ஐ.ஆர். பிளாட்பாரம் படிக்கட்டுகளைத் தவிர அதுவரை எனக்குச் சேர்ந்தாற் போல் அத்தனை படிக்கட்டுகள் ஏறிப் பழக்கம் கிடையாது. எனவே, மலையுச்சியை அடைவதற்குள் என் கால்கள் கீரைத் தண்டுபோல் துவள ஆரம்பித்துவிட்டன.

"குறுக்கிலும் நெடுக்கிலும் மூலை வாட்டில் நடந்து போனால் காலை வலிக்காது" என்று மலை மீது ஏறிவந்த திரு. காமராஜ் யோசனை கூறினார்.

அவருடைய யோசனைக்கிணங்க குறுக்கிலும் நெடுக்கிலும் மூலை வாட்டாக நடந்து பார்த்தேன்; என்ன ஆச்சரியம்! காலைத் துளிக்கூட வலிக்கவில்லை. முழங்கால் முட்டியைத்தான் வலித்தது! மலையுச்சியை அடைந்ததும் அங்கே கிடைத்த குளிர்ந்த கோடைக்கானல் தண்ணீரைப் பருகிச் சிரம பரிகாரம் செய்துகொண்டு கோயில் கர்ப்பக் கிருகத்துக்குள் பிரவேசித்தோம். சிறிது நேரத்துக்கெல்லாம் மகாத்மாஜி, ராஜாஜி, தக்கர்பாபா மூவரும் வந்து சேர்ந்தார்கள். ஆண்டவனுக்கு