பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

83


சீதையையும், திரெளபதியையும் போல் தைரியமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்யவே இங்கு வந்துள்ளேன்" என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

நவகாளிக் காட்சிகளைக் கண்டு மனம் வெதும்பிய மகாத்மா, "சத்தியமும், அஹிம்சையுமே என்னை இந்த அறுபது வருடங்களாகக் காப்பாற்றி வந்தன. இன்றோ அந்த இரு சக்திகளும் என்னைப் பெருஞ் சோதனைக்குள்ளாக்கி இருக்கின்றன. நவகாளியில் நான் எங்கும் இருளையே காண்கின்றேன். வெளிச்சத்தைக் காண்கிலேன். வெளிச்சத்தை நாடிக் கால்நடை யாத்திரையை மேற்கொள்வேன்" என்று தமது கால்நடை யாத்திரையைத் தொடங்கினார்.