இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை
mo- +
பத்து நிமிடங்கள், பதினைந்து கிமிடங்கள் என்கிற கால அளவில், நடிக்கப் பெறுகின்ற ஓரங்க நாடகங்களின் தொகுப்பே, நவனின் நாடகங்கள் எனும் தலைப்பில் நூலாக வெளிவந்திருக்கிறது.
அனைத்து நாடகங்களும் சென்னை வானெலியில் சிறுவர் நிகழ்ச்சியிலும் சென்னை.தொலைக்காட்சி நிலையத்தின் கண்மணி பூங்கா நிகழ்ச்சியிலும் அரங்கேற்றப்பட்டவைகளாகும். அதன் பின், பல பள்ளிகளில் இந்நாடகங்கள் பலமுறை மாணவ, மாணவிகளால் நடிக்கப்பெற்றும் இருக்கின்றன.
மாணவ மாணவிகளுக்கென்று, அவர்தம் ஆர்வம், நடிப்பாற்றல், உணர்ச்சி இவற்றையே அடிப்படையாக வைத்து, நல்லொழுக்கத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தின் மேன்மையை விளக்கிடும் வகையிலே, இந்நாடகங்கள் எழுதப் பட்டிருக்கின்றன.
நாடகங்களை எ வ் வி த சிரமமுமின்றி நடத்தவும், எளிதாகப் பேசவும், விருப்பத்துடன் நடிக்கவும் கூடிய