பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 இருந்தாலும் பாசமுள்ள மகனும் ஏமாத்துவாங்கறது நிஜமாதான் இருக்குது. ம்... என்ன உலகம் இது! காமா: (இரண்டு கைகளிலும் டம்ளரை ஏந்தியபடி) என்ன உலகமா? பூலோகம்தான். என் வீட்டுல காலடி வச்சதுமே உலகமே மறந்து போச்சு பார்த்தியா? இது என் வீட்டுக்குள்ள ராசி. பார்த்துகிட்டியா... பொன்: பார்த்துகிட்டுதான் இருக்கேன். ஆன விலைதான் அதிகமா இருக்கு. காமா: விலையா! உலகத்துக்கே வி8ேெபாடுறியா? ரொம்ப படிச்சாலே புத்தி குழம்பிப் போயிடுங்கறது சரியாதான் இருக்குது ம்...அது போதை பாட்டில் இல்லே...டானிக் பாட்டில்... கீழே வச்சிட்டு இந்த மோரை சாப்பிடு... எல்லாம் சரியா போயிடும். பொன்: (மோரைக் குடிக்கிருள். குடித்த பிறகு) எல்லாம் சரியா போ கணும்னுதான் நினைக்குறேன். ஆன. ஆண்டவன் ஏன்தான் உன்னை இப்படி அதிகமா சோதிக்கிருனே தெரியலே. உன்லை எப்படித்தான் இதையெல்லாம் தாங்கிக்க முடியுதோ? காமா: ஏன் இப்படி மூடுமந்திரமா பேசுற? நான் உள்ளே போயிட்டு வர்ரதுக்குள்ளே உனக்கு என்ன ஆச்சு? சரி1 நீ சீக்கி ரம் வீட்டுக்குப் போ. நீ வந்த நேரம் சரியில்லே! பொன்: நான் வந்த நேரம் நல்ல நேரம், வெள்ளம் வர் ர துக்கு முன்னே அனேகட்டி வைக்குறது புத்திசாலித் தனம், வெள்ளம் வந்த பிறகு கட்ட முயற்சி பண்றது முட்டாள்தனம். காமூ! நீ யாரை ரொம்ப நல்லவன்னு நம்புறியோ... அவன் உன் பெரிய பையனை ரொம்ப நல்லவன ஆக்கிடுவான் போலிருக்கே!'[பதறுகிருன்)