பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஏகா: இப்படிக் கொண்டாப்பா ஆமா..! இது ஆறுமுகம் எழுதிக் கொடுத்த பாண்டு. கப்ா: என் கடன் 500 ரூபாய்ங்க, ஆன, ஆறுமுகத்தோடி கடன் 5000 ரூபாய்னு போட்டிருக்கு! அது என்கிட்ட வந்துடுச்சி. ஏகா: ரொமப நல்லதா போச்சு! உன்கிட்ட கிடைச்ச மாதிரி, யார் கிட்டேயாவது இது கிடைச்சிருத்தா எப்படி எப்படியோ பண்ணியிருப்பான். நீ போய் நானேக்குக் காலையில் வா! எடுத்து வைக்கிறேன். சுப்ர: ரொம்ப உதவிங்க... நான் காலையில வந்து பார்க்குறேங்க. (போ கிருன்) (அவன் போன பிறகு, ஏகாம்பரம் தன் மனைவியை அலட்சியமாகவும் பிறகு கோபமாகவும் பார்த்து) கா: பார்த்தியா சரஸ்வதி! பாண்டு பத்திரத்தை மார்க் காம எடுத்துக் கொடுத்திருக்கியே, இதற்கு என்ன சொல்றே? சரஸ்: நீங்க சொன்ன அடையாளப்படி தான் எடுத்துக் கொடுத்தேன். நீங்க சரியா சொல்லியிருந்தா நானும் சரியா எடுத்துக் கொடுத்திருப்பேன். இருந்தாலுல் என் தப்புத் தாங்க, இந்நேரம் 5000 ரூபாய் நஷ்டம் ஆகியிருக்குமே! th ஏகா: படிப்போட அருமை புரியுதா... போய் அந்தப் பத்திரக் கட்டை எடுத்துகிட்டு வா. இதை வச்சிட்டு அதை எடுத்துத் தர்றேன். நாளைக்கு நீயே கொடுத்திடு! (பீரோவைத் திறந்து சரஸ்வதி ஒருகட்டினை எடுத்துக் கொண்டுவந்து தருகிருள். அதை ஏகாம்பரம் பிரித்து பார்க்கிருர், அதில் சுப்ரமணியத்தின் பான்டினைக் காணவில்லை.)