பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விலங்கோடு போய், கோர்ட்டுல நின்னு, கைதியா மாறி கம்பி எண்ணப் போறேன்...என் குழந்தை களோடு நீ நடுத் தெருவில நிக்கப் போறியே! (அழுதல்) பார்வதி : அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டேன், உருட்டி முழிக்கப் போய் உள்ள முழியும் நொள்ளையாய் போச்சே! ஏங்க! இதிலிருந்து தப்பிக்க வேற வழியே இல்லையா? அருண : கோர்ட்டுல போய் எதிர் வழக்காடனும்! பார்வதி : இந்தாங்க, எங்கிட்டே இருக்குறது இந்த தோடும். மூக்குத்தியும் தான். இதை வித்தாவது என் கணவரை காப்பாத்துங்க (அழுதல்) அருண கேஸ் ரொம்ப பெரிசும்மா! லஞ்ச ஊழல், மோசடி வழக்கு. குறைஞ்சது 10 வருஷமாவது தண்டனை கிடைக்கும், பார்வதி: (சத்தம் போட்டு அழுகிருள்.) அப்பா, அம்மா. இங்கே வாங்களேன்!என் நிலைமையைப் பார்த்தீங்களா! (உள்ளே பேச்சுக் குரல் உள் அறையிலிருந்து) சிந்தா என்னங்க! பார்வதி அழற சத்தம் போல இருக்கு. பரமா ; போடி. உன் மகளுக்கு மெதுவா பேசவும் தெரி யாது. அழவும் தெரியாது. ஏதாவது குடும்ப சண்டையா இருக்கும். இங்கே பேசாம இரு சிந்தா இல்லீங்க. வாங்க போய் பார்க்கலாம்i (வருகின்றனர்) பார் : என்னை மன்னிச்சுடுங்க. மாத பார்வதி! நான் உன்னை மன்னிச்சுடலாம். நான் செய்த தப்புக்கு மன்னிப்பே கிடையாதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/81&oldid=777147" இலிருந்து மீள்விக்கப்பட்டது