பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. தி.ப மா on) 103


வாயை மூடு, விஜயம் !’ என்று இரைந்தான்் ரகு.


மூடிக்கொள்கிறேன். முத்துமாலே செய்து போட் டுக் கழுத்தில் பளபள வென்று மின்னுகிறதோ, இல்லையோ?”


" என்னல் முடியாது, விஜயம்! அவ்வளவுதான்். யுேம் உன் முத்துமாலேயும்...... † :


விஜயம் சரசர வென்று உள்ளே செள்ருள். முத்து மாஃலயைக் கழற்றிப் பெட்டியில் வைத்தாள். அது கழுத் இல் இருப்பதால்தான்ே கணவனுடன் சண்டை போடும் படி ஆசையைத் துரண்டுகிறது : சனியன்! கண் மறை வாகக் கிடக்கட்டும் !


அதற்குப்பிறகு விஜயத்தின் மனத்தில் ஆழ்ந்த கிலே சம் குடி கொண்டது. ரகுவை மணப்பதால் உலகில் மற்றப் பணக்காரப் பெண்களுடன் சரிசமமாக உலாவ லாம் என்று அவள் கண்ட கனவு தேய்ந்து போயிற்று. பகு விஜயத்தை மனப்பதால் சீர்திருத்தவாதிகளில் முதன்ம்ை ஸ்தான்ம் வகிக்கலாம் என்று எண்ணியதும் வீனுயிற்று. இருவருடைய ஒன்றுபட்ட மனங்களுக்கும் இடையே திரை ஒன்று விழுந்தது. ரகு விஜயத்துடன் அதிகம் பேசுவதில்லை. விஜயமும் ரகுவுடன் பேசுவதில்லை. மனத்தில் ஏற்பட்ட வருத்தத்தைத் தாங்கச் சக்தியில்லா மல் விஜயம் கோய்வாய்ப்பட்டாள். ரகுவின் கண்களுக் குத் திடீரென்று ஒரு நாள் விஜயத்தின் மெலிந்த உஇம், குழி விழுந்த கண்களும் தெரிந்தன ' விஜயம்! நீ ஏன் இளைத்துப் போகிருய் சீ உன் உடம்புக்கு graw oor ’’’


' உடம்பு சரியாகத்தான்் இல்லை.'


டாக்டரிடம் காட்டலாமா?’’


வேண்டாம், பார்த்துக் கொள்ளலாம் ' என்ருள் விஜயம்.


நாளுக்கு நாள் விஜயத்தின் உடம்பு இளைத்துத் துரும்பாகி விட்டது; படுத்த படுக்கையாகப் படுத்து விட் டாள். விஜயம் வியாதிக்காரியாக மாறிய பிறகுதான்்


தன் தப்பை உணர்ந்தாள்.