பக்கம்:நவராத்திரிப் பரிசு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நவராத்திரிப் பரிசு

"உனக்கு வேண்டாமாடி அம்மா? இந்த அசடு கேட்கிறதென்று கொடுத்துவிட்டு நிக்கறயே" என்றாள் மகாலட்சுமி.

"பரவாயில்லை; அவள் தான் வைத்துக்கொள்ளட்டும்" என்றேன் நான்.

“இது எனக்கு நவராத்திரிப் 'பிரைஸ்' இல்லையா மாமி" என்றாள் கௌரி.

"ஆமாம் நவராத்திரிப் பரிசுதான்" என்றேன்.

கௌரி என்னைச் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

இந்த வருஷம் மஹிஷாசுரமர்த்தனிக்கு அலங்காரம் பண்ணக் கௌரியின் வீட்டுக்குப் போகாமல் இருக்க முடியவில்லை.