பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

智盛 நவவித சம்பந்தம் அறிவான் என்கிறது' என்பதாக எம்பெருமானின் ஒவ்வொரு சேஷ்டிதங்கனை தினைந்து தாரை தாரையாகக் கண்ணிர் பெருக விடுகின்றாள். சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய் நம் பெருமாள் சேவை சாதிக் கின்ற அழகு காண்மின் காண்மின் காண வாரீர்” என்று சொல்லி அதிக நினைவினால் சங்கு சக்கரங்களை நோக்கிக் கை கூப்புகின்றான். தாமரைக் கண்களால் நோக்காய்!” (9.2:1 என்று சொல்ல வேண்டுமென்று நினைத்துத் தொடங்கினாள் தாமரைக் கண் என்று சொன்ன அளவில் விகாரப்பட்டு மேலே எழமாட்டாமல் தளர்கின்றாள். 'உன்னை விட்டு எப்படித் தரிக்க முடியும்?' என்று வயிறு பிடிக்கின்றாள். இப்படிச் சொன்னவுடன் அவன் வரத் காணாமையாலே அகன்ற பூதலத்தைக் கைகளால் துழாவுகின்றாள். இவ்வாறு தான் கூறி இவள் விஷயத்தில் ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கின்றாய்? என்று பெரிய பெருமாளைத் தாய் வினவுவதில் ஆழ்வாரின் ஈசுவர பார் தந்திரியமும் உபாயத்தில் துணிவும் புளிச்சிடுவதைக் கான்லாம். (4) திருமங்கையாழ்வாரின் திருவிடஎந்தை பற்றிய திருமொழியொன்று (2.1) தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் இரங்குவதாக நடைபெறுகின்றது. இதில், அலங்கெழு தடக்கை ஆவன்வாய் ஆம்பற்கு அழியுமால் என்உள்ளம் என்னும்: புலம்செழு பொருர்ேப் புட்குழி பாடும் போதுமே நீர்மலைக்கு என்னும் குலங்கெழு கொல்லிக் கோமள வல்லி கொடிகிடை கடுமழைக் கண்ணி இலங்கு எழில் தோளிக்கு என் கினைந்து இருந்தாய் ? இடஎல்தை எங்தை பிரானே (8) என்பது எட்டாம் பாசுரம், காதல் மிகுதலால் பரகால நாயகி வாய் வெகுவுதல்களைத் திருத்தாயார் பேசுகின்றாள். கண்ணன் திருப்பவளத்தில் வைத்து ஊதுகின்ற புல்லாங்