பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 தவவித சம்பந்தம்

ஆழ்வீர்! இப்போது நீர் திருவாறன்விளையிலே பீசாவண்யம் (கற்று) முற்றியிருந்தீராகிலும், பலகாலும் 'பரமபதம், பரமபதம் என்று வாய்வெருவிக் கிடந்தீராதலால், எம்பெருமான் இதையே கொள்ளும்’ என்று நிர்பந்தித்துக் கொடுத்தானாகில் என் செய்வீர்?’ என்று சிலர் உசாவிய தாகக் கொண்டு அதற்கு விடை தருகின்றார் இப்பாசுரத்தில், “அதனை, என் நினைவிற்கு மூலமாக இருக்கின்ற சர்வேசு அசனைக்கேட்டுக் கொள்வது' என்று அருளிச் செய்வர் நஞ்சீவர், 'திருவாறன்விளையே பிராப்பியம் என்று இருக்கின்றீர்; ஈசுவரன் சுதந்திரன் அல்லனோ? அவன் பரம பதத்தைத்தரின் என் செய்வீர்!’ என்ன, 'அவன் முற்றறி இனன் அல்லனோ? அவன் அறியானோ, என்கின்றார் : என்று பின்னான் பணிப்பர். 'அவன் புருஷார்த்தப் பிரதன் என்று பிரசித்தி பெற்றவன் அல்லனோ? புருஷன் விரும்பியதை யன்றோ அவன் கொடுத்தருளுவன்! எனது சிந்தை திருவாறன்வினை தவிர மற்றொன்றையும் கணிசியாதிருக்கும் படியை அறிய ஆற்றலற்றவன் அல்லனே; அப்படி அறிந்து கொண்டும் எங்கனே மற்றொன்றினைக் கொடுப்பான்?’’ என்கின்றார். 'மற்றொன்று என்கிறது, பரமபதத்தின் பெயர் சொல்லுகையும் கூட அஸ்ஹ்யமானபடி என்பது ஈடு. இதனாலும் ஞாதாதேயன்' உறவு உறுதியாகின்றது.

இந்த உறவு குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி யின் விற்துவக் கோடு பற்றிய திருமொழியின்(5) எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள் 3.5ಅಡಿápaäär® ஷோரனூர்-குருவாயூர் சாலையில் ஷோஜ்ாரிலிருந்து 14 தி.மீ. த்ொலைவிலுள்ள்து. சந்நிதி தம்புழா நதிக்கரையில் உள்ளது ஷோரனூரிலிருந்து பேருத்து வசதிகள் உள்ளன. இறைவன் : உய்யவந்த பெருமான்; தாயார் விற்றுவக் கோட்டுவுல்லி நாச்சியர்ர். நின்ற திருக்கோலம்; தெற்கு நோக்கிய திருமுகமண்டலம்.