பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘鲁盛 நவவித சம்பந்தம் என்பது அவரது உடலிலும் வியாபித்துள்ளான் ສ.ສ.ສ. குறிப்பிட்டாவாறாகின்றது. இந்த மருமம் குருகுல வாசப் பேது இல்லாதார்க்கு அறிவது அரிது. இந்த இரகசியம் திருக்கோட்டிஆர் நம்பி ஆளவந்தார் திருவடி சம்பந்தத்தால் கேட்ட பெரும் பொருளாகும். இது கூரத்தாழ்வான் வழியாக எம்பெருமானார்க்கு நிதிபோல் கிடைத்த படியால் இப்பெரும் பொருள் அவர் திருவுள்ளத்தில் கிடந்து கிதைப் பேருரையில் (7:18) வெளியாகியுள்ளது. இது பற்றி ஈட்டில் குறிப்பிடப்பெற்றுள்ள ஓர் இதிகாசமும் ஈண்டு அதியத்தக்கது. ஒரு சமயம் எம்பெருமானார் கோஷ்டியில் உபய வேதாந்தம் பற்றிய காலட்சேபம் நடைபெற்றது. அப்போது, 'ஆன்மாவுக்கு ஞானம், ஆனந்தம், அடிமை இவை நிரூபக மாகச் சொல்லப்பெறுகின்றனவே, இவற்றுள் அந்தரங்க நிரூபகம் எது? என்ற ஒர் ஆராய்ச்சி திருவோலக்கத்தில் உண்டாயித்து. எம்பெருமானார் இப்பொருளைத் தெளிவாக அறிந்திருந்தாலும், இதை ஆசாரியர் மூலம் வெளியிட வேண்டும் என்று திருவுள்ளங் கொண்டார். கூரத் தாழ்வானை நோக்கி வாரீர் ஆழ்வான்! திருக்கோட்டியூர் சென்று நம்பியைச் சேவித்து இதனை அறிந்து வாரும் என்று தியமித்தார். ஆழ்வாலும் கம்பி சந்நிதிக்கு எழுந்தருளி தண்டம் சமச் பித்துச் செய்தியை விண்ணப்பம் செய்து ஆறு மாதங்கள் சேவித்திருந்தும் ஆசாரியரின் திருவுள்ளம் இரங்கிற்றிலது? இதன்ால் ஆழ்வான் தம்மூர்க்குத் திரும்ப நினைத்து, புறப்படப் 3. கட்டின் தமிழாக்கம் பகுதி-8. திருவாய். 8.8:2-இன் 盪一發鄧 蕊"蟒為。 - 9. இப்படித்தானே இவ்வாசாரியர் திருமந்திரம் உபதேசம் பெறுவதற்காகச் சென்ற இராமாதுசரை 18 முறை திருவரங்கத்திற்கும் திருக்கோட்டியூருக்கும் பயணம் செய்யுமாறு இழுத்தடித்ததை நினைவு கூர்தற்பாலது.