பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்தாபோக்கிய சம்பந்தம் 慧爱器 ஈசுவரன் உயிரை அடிமை கொன்பவன் போன்து, 8.விசை நெருங்கி, அதன்மாட்டுத் தனக்குள்ள வேட்கை மிகுதியால் உயிரைத் தலைமையாக வைத்துத் தான் அடிமையாக இருந்து, இழிதொழில் செய்து, அவ்விதத்தில் உயினை வினியோகம் கொள்ளுதல் மற்றொரு வகை. ஈண்டுக் கூறிய இரண்டாவது வகை, அதுபவத்திற்குக் குசேலரின் வாழ்க்கை வரலாற்றின் திகழ்ச்சி ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். குசேலர் தம் துணைவியின் துண்டுதலால் கண்ணனிடம் செல்லுகின்றார். குசேலரின் வருகையைக் காவலரால் அறிந்த துவரைதாதன் தானே அரியணையினின் தும் இறங்கி வந்து, திலகமண் தோய ஐயன் திருவடி வணங்கிப் பின்னர் கிலவுமெய்ப் புணகம் போர்த்து கிறம்புறத் தழுவிக் கொண்டான். என்றவாறு குசேலரின் திருவடிகளில் வணங்குகின்றான். பின்பு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவருடைய திருவடிகளைத் தன் மடிமீது வைத்து, இத்திருவடிகள் நீண்ட தொலைவு நடந்து நொந்தனவே!" என்று பகர்த்து கொண்டே அவற்றை மெல்லெனப் பிடிக்கின்றான். குசேலர் கண்ணன் செய்யும் உபசாரங்களுக்குத் தன் பாசதந்திரியத்திற் கேற்ப தலைவனது வசத்திற்கேற்ப) இசைந்திருக்கின்றார். இதனை, வழிநடக் திளைத்த வேஇம் மலரடி இரண்டும்?’ என்று கழிமகிழ் சிறப்பு மெல்ல வருடினான் கமலக் கண்ணன்; Tகுெசேலோக்கியானம் - குசேலர் நகர்ப் புற ம் அடைந்தது-104