பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி. 78-அகவையை எட்டிய இந்த நூலாசிரியர் பி. எஸ்.சி., எல்.டி., வித்வான், பி.ஏ.எம்.ஏ., பிஎச்.டி., பட்டங்கள் பெற்றவர். ஒன்பதாண்டுகள் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் (1941 - 1956), பத்து ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராச ரியரா கவும் (1950 - 60), பதினேழு ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் த் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும்(1960-77)பணியாற்றி ஒய்வு பெற்றவர். 1978-இல் சென் னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 பிப்ரவரி 1979 ஜூன்) கலைக்களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். நாலாயிரத் திவ்வியப பிரபந்தத்தில் நம்மாழ்வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச்.டி.) பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கில்த்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். பெரும்பாலும் இவிை நூல் வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர ஆசிரியம் (5), இலக்கியம் (18), சமயம் (27), திறனாய்வு (16), அறிவியல் (17), ஆர ய்ச்சி (6), வாழ்க்கை வரலாறு (13)-என்று 162 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும் சமய நூல்களில் மூன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு பரிசுகளும்; அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசும், ஒன்று தமிழ் வளர்ச்சிக்கழகப் பரிசும்-ஆக எட்டு நூல்கள் பரிசுகள் பெற்றவை. இவர்தம் அறிவியல் பணிய்ைப் பாராட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருங்கலைக் கோன்’ எ ன் ற விருதையும், பண்ணுருட்டி வைணவசபை இவரது சமயப் பணியைப் பாராட்டி பூர் சடகோபன் பொன்னடி’ என்ற விருதையும் இவர்தம் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தமிழக அரசு திரு. வி. க. விருதையும், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற விருதையும் வழங்கிச் சிற்ப்வித்தன். இனிம்ை, எளிமை தெளிவு இவர்தம் நூல்களின் தனிச் சிறப்புகளாகும். பிறப்பு : 27 - 8 - 1916