பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

வரவேற்க வழக்கம்போல் வருகின்ற கட்சிக்காரர்கள் யாரும் இல்லை .

பத்திரிகைக் காரர்கள் ஏராளமாக வந்து குவிந்திருந் தார்கள்.

ஒரு சின்ன பெண் பூச் செண்டும் மாலையும் கொண்டு வந்து முன் நின்றாள்.

நாரதர் முன் விழிப்போடு மறுத்துவிட்டார். அவர் பார்த்த தமிழ்ப் படங்களில் பூச் செண்டில் ‘பாம் வைத்தி ருப்பதைப் பார்த்திருக்கிறார். மாலை துண்டு எதுவும் கூடாது என்று உறுதியாக இருந்தார். ராஜீவ் காந்தி யைக் கொலை செய்ததில் இருந்து அவருக்கு இப்படி ஒரு பயம் ஏற்பட்டு விட்டது.

மறுநாள் பத்திரிகையில் மாலைகளை ஏற்காத பிரமுகர் என்று விளம்பரம் தரப்பட்டது.

கின்னத் புத்தகத்தில் அவர் பெயர் இடம் பெற்றது என்று கேள்வி.

பக்த கோடிகள் சிலர் அவரைத் தரிசிக்க வந்திருந்தனர்

அவருக்கு ஆரத்தி எடுத்துக் கர்ப்பூரம் கொளுத்தி வழிபட்டு வழி விட்டனர்.